படிச்சோம்!

இன்று தினமலரில் படித்தது:

கருணாநிதி நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், 12:10 மணிக்குத்தான் வேட்புமனு தாக்கல் செய்தார். 10:30 முதல் 12 மணி வரை எமகண்டம் என்பதால் அந்த நேரத்தை தவிர்த்து 12 மணிக்குப் பிறகு மனு தாக்கல் செய்தார்.

(எமன் திராவிடக் கடவுள்ன்னு பெரியவர் திரிபாதியே சொல்லிட்டாராம்.)

அவர் காட்டியுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு 22 கோடியே 33 லட்சத்து ஆறாயிரத்து 892 ரூபாய். சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீடு அவர் சொத்து பட்டியலில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(ரெண்டு வீடு மெயின்டெயின் பண்ணிட்டிருந்தாலும் கணக்கு வழக்கில் ஒரு வீடு தானா? )

நான்குநேரி தொகுதி காங். வேட்பாளர் வசந்தகுமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனக்கு சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளதாகவும், 13 கோடி ரூபாய் மதிப்பில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(இந்தியாவின் நம்பர் ஒன் டீலருக்கே இந்த கதி தானா?)

கோவணம் அணிந்து அரை நிர்வாணமாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர் கைது செய்யப்பட்டார்.

(இலவச அரிசி, இலவச கலர் டிவி, இலவச பசு, இலவச முட்டை, இலவச கொசுவர்த்தி, இலவச மூட்டைப்பூச்சி மருந்து எல்லாம் கொடுத்தா என்ன ஆகும்ன்னு காட்டிட்டாரு. )

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories