ஹி...ஹி!

AIADMK supremo Jayalalithaa's assurances to the people at present were "a copy" of the manifestoes of the DPA constituents, PMK founder S Ramadoss said today.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாயா? எங்களின் அறிக்கையிலிருந்து அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் அறிக்கை எவ்வளவு கேவலமானது, அதில் இருப்பதெல்லாம் சுத்தப் பேத்தல் என்று? அவர்கள் அறிக்கையில் சொல்வதெல்லாம் யாராலும் செய்யமுடியாது என்று எங்களுக்குத் தெரியாதா? அதை எழுதிய எங்களுக்கே நீ சொல்கிறாயா?

Police today seized 65 bags of rice, containing 25 kgs each, from the premises of a political leader's house of in Ariyankuppam near here. Talking to reporters here, District Collector G Theva Needhi said it was suspected that the rice was meant for distributing to voters in the constituency and cases were registered against the house owner.

உடன்பிறப்பே, சற்றொப்ப நான்கு வாரங்களுக்கு முன் நான் அறிவித்த இரண்டு ரூபாய்க்கு அரிசி திட்டத்தை அல்லிராணியும் அவளது யவன அடிமைகளும் எள்ளி நகையாடினர். ஆனால், அவர்களுக்குத் தெரியுமா இத்திட்டத்தை எப்படியும் அமுல்படுத்துவோம் என்று. நம் பாசறையில் பாலபாடம் பயின்றவர்கள் மூன்று வாரங்களாக அரிசி மூட்டைகளை வீட்டில் பதுக்க ஆரம்பித்துவிட்டனர். பகலில் பிரசாரம் செய்து ஓட்டு பிரிக்கின்றனர். இரவில் கடைகளில் ஓட்டு பிரித்து உள்ளே புகுந்து அரிசி மூட்டைகளை எடுத்து வருகின்றனர். இப்படி ஐந்து வாரம் செய்தால் போதும். இரண்டு ரூபாய்க்கு என்ன, ஒரு ரூபாய்க்கு கூட எங்களால் அரிசி தர முடியும். உடன்பிறப்பே, களவாடுவது எங்களுக்கென்ன புதியதொன்றா? தேனை எடுத்தபோதெல்லாம் புறங்கையை நக்கியவர்கள் நாம்தானே.

Speaking at a press conference here, Subramanian Swamy said DMDK would not affect poll prospects of any party. The prospects of Janata Party and the BJP were bright in the state, he claimed.

விஜய்காந்த் கட்சி 234 தொகுதில்லேயும் போட்டிபோட்டு டெபாசிட் தோக்கப்போறா. நாங்கோ 5 தொகுதில்லேதான் டெபாசிட் தோப்போம். இப்போ சொல்லுங்கோ இந்த தேர்தல்ல பெரிசா தோக்கறது அவாளா நாங்களா?

"I have to defend myself. But I will not stoop down to make personal allegations against anybody, Maran said.

வை.கோ என்னைப் பற்றிக் கூறும் குற்றச்சாட்டுக்களை நான் எதிர்ப்பேன். ஆனால், நான் யாரைப் பற்றியும் கீழ்த்தரமாக பேசமாட்டேன். அதிலும், குறிப்பாக அந்த கேடுகெட்ட சோமாறி கீறானே பேட்டா டேய், அவன் மூஞ்சியில என் பீச்சாங்கையை வச்சு அவனை சும்மா கீசு கீசுன்னு கீசிடுவேன், ஆனா நான் அந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கமாட்டேன்.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



7 comments: to “ ஹி...ஹி!